சுசீந்திரம், பிப். 12 –
சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு காலை சிஐடியு, திமுக, மதிமுக, ஐஎன்டியூசி உட்பட்ட கட்சிகள் சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் அந்தோணி அவர்கள் கூறும் போது: 52 கோடி தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து நவீன கொத்தடிமைகளாக மாற்றும் தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய கோரியும் விவசாயத்தை அழிக்கும் விதை திருத்தம் சட்டம் 2025 ரத்து செய்யக் கோரியும் 140 கோடி மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்க கூடாது என்பதற்காகவும் பொதுத்துறை சொத்துக்களை இயற்கை வளங்களை 17 லட்சம் கோடிக்கு தனியாருக்கு விற்கும் திட்டத்தையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைக்கு உறுதிச் சட்டம் 100 நாள் வேலைத்திட்டம் சீர்குலைக்கும் திட்டத்தை ரத்து செய்ய கூறியும் இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் விக்கித் பாரத் சிக்க்ஷா அதிஸ்தான் என்ற சட்டம் முன்னறிவிப்பை கைவிடுவது உட்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்ட குழு சிவதாணு, தொமுச செயலாளர் தமிழ்ச்செல்வன் ஹெலன், மதிமுக அம்பலவாணன் ஆகியோர் தலைமையில் திமுக பேரூர் செயலாளர் சுதை சுந்தர், மதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது. கன்னியாகுமாரி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பின்பு தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை கைது செய்து சுசிந்திரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். பின்பு விடுவிக்கப்பட்டனர்.



