சிவகங்கை, செப். 01 –
சிவகங்கை மாவட்டம் அரசனூர் ஊராட்சி செம்பூர் கிராமத்தில் அரசனூர் குரூப் சிவகங்கை வட்டம் புல எண் 519 / 2 என்ற எண்ணில் 67 ஆதி திராவிடர்களுக்கான இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இந்த இடத்தில் சுமார் 40 சென்ட் இடம் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 40 சென்ட் இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற முயற்சித்து வருகிறார்கள். எங்கள் ஊரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் சுமார் 60 குழந்தைகள் படித்து வருகிறார்கள். கூடுதல் பள்ளி கட்டிடம் எங்கள் ஊருக்கு கிடைத்துள்ள நிலையில் போதிய இலவசதி இல்லை என்ற காரணத்தால் பள்ளிக்கட்டிடம் கட்டுமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது பயன்பட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சில நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் அதை நிறுத்த கோரி முன்னாள் மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவும் பிறபிக்கப்பட்டுள்ளது.
பட்டா பெற்றவர்களும் வெளியூரில் வசித்து வருகிறார்கள். ஆனால் தற்போது மீண்டும் ஐந்து நபர்கள் முள்வேலி போட்டு ஆக்கிரமிப்பு செய்கின்றார்கள். இவ்வாறாக தொடர்ந்து தனிப்பட்ட நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டே வருகிறார்கள் மேலும் செம்பூரில் வசிக்கும் ராமன் மகன் காட்டு ராஜா என்பவர் பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்து பிரச்சினை செய்து வருகிறார். இதை புகார் செய்தாலும் வரும் அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறார்கள். மேற்படி சர்வே எண் 519/2 உள்ள பொது இடத்தில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து மேற்படி பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு ஏதுவாக அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி எங்கள் குழந்தைகளின் கல்விக்கும் அரசு பள்ளி கட்டுவதற்கு தங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த பொது இடத்தை பள்ளிக்கூடம் கட்டி பயன்படும் வகையில் கொண்டு வர வழிமுறை செய்ய வேண்டும் என செம்பூர் கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்தனர்.



