சிவகங்கை, செப். 11 –
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் உள்ளது காஞ்சிரங்கால். இந்த ஊரில் பாம்கோ என்ற அரசு நிறுவனத்தின் எதிரே நடுரோட்டில் ஒருவர் விதிகளை மீறி பாதையை ஆக்கிரமித்து பள்ளங்கள் தோண்டி உள்ளார். இந்தப் பள்ளங்களில் மழை நீர் தேங்குவதால் அந்த வழியாக வரும் பள்ளி குழந்தைகள் தினந்தோறும் அந்தப் பள்ளங்களில் விழுந்து எழுகின்றனர்.
இது தொடர்பாக கிராம மக்கள் வருவாய்த் துறை மற்றும் பஞ்சாயத்து யூனியன் நிர்வாகத்தில் பல முறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் கிராம மக்கள். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி ரோட்டை ஆக்கிரமித்து பள்ளம் தோண்டியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.



