திருப்புவனம் அருகே வழிதவறி வந்த புள்ளி மானை மீட்ட இளைஞர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரமனூர் கண்மாயானது சுமார் 800 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்டதாகும் இந்த கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள் அடர்த்தியாக சூழ்ந்துள்ளது இதனுள் காட்டு விலங்குகள் அதிகளவில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வருவாதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த சுமார் 2 1/2 வயது மதிக்கத்தக்க புள்ளி மான் ஒன்று அதிகாளை நேரத்தில் வழி தவறி சொக்கநாதிருப்பு கிராமத்திற்குள் புகுந்துள்ளது இதனை கண்ட கிராம இளைஞர்கள் ஒன்றினைந்து அந்த புள்ளி மானை பாதுகாப்புடன் மீட்டு அதற்கு முதற்கட்டமாக உணவு தண்ணீர் வழங்கி அதன் வசிப்பு இடமான அடர்ந்த கண்மாய் பகுதியில் பத்திரமாக விட்டு வந்தனர். இந்த சேவையை அறிந்த சமூக ஆர்வலர்கள் பலர் சொக்கநாதிருப்பு கிராம இளைஞர்களை வெகு பாராட்டி வருகின்றனர்.



