புதுக்கடை, ஜனவரி 31 –
புதுக்கடை அருகே அலங்காரவிளை பகுதியை சேர்ந்தவர் கபரியேல் (90). இவரது மனைவி நேசம்மா ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் முதியவர் குடும்ப வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவ தினம் மனைவியின் கல்லறை தோட்டத்திற்கு கபிரியேல் சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து கபரியேலுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
உடனடியாக அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே முதியவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கபரியேலின் உறவினர் ஆல்பர்ட் என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


