சுசீந்திரம், செப். 6 –
சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு மேல் தாணுமாலய சுவாமி கோவிலுக்குள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெற்கு பகுதியில் உள்ள ஸ்ரீ விண்ணகரம் பெருமாள் சுவாமியின் திருவிழாவிற்கான ஒன்பதாம் திருவிழா நாளை என்பதால் மாலை 4 மணி அளவில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அலங்கரிக்க செய்து அலங்கரிக்கப்பட்ட இந்திரன் தேரில் கோயில் பிரகாரத்தை ஒருமுறை பக்தர்களால் தேரை இழுத்து வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதன் பின்பு சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை மாலை 6:30 மணிக்கு மேல் தாணுமாலய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி இல்லை. பின்பு கோயில் நடை சாத்தி கோவிலுக்குள் உள்ள சுவாமி விக்கிரகங்களுக்கு தர்ப்பைபுல் வைத்து பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றது. அதன் பின்பு கோயில் நடை சாத்தப்படும். இதுபோல சுற்றுவட்டார கோவில்களிலும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு சுவாமிகளுக்கு பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கோயில் நடை சாத்தப்படுகின்றது.



