சங்கரன்கோவில், ஆகஸ்ட் 19 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகர்மன்ற புதிய சேர்மன் தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்ற திமுக கௌசல்யா வெங்கடேஷ், மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் டாக்டர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சேர்மன் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கௌசல்யா வெங்கடேஷ் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்பொழுது பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் சுப்பையா, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் புனிதா, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் மாரிசாமி, மதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இசக்கியப்பன், திமுக மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சையா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், துணை அமைப்பாளர் வீரமணி, நகர மாணவரணி வெங்கடேஷ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்தி, முன்னாள் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பத்மநாதன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், செய்யது அலி, நகர வர்த்தக அணி அமைப்பாளர் ரகுமான், மதிமுக முன்னாள் நகர செயலாளர் ஆறுமுகசாமி, கவுன்சிலர்கள் கோமதி, ராஜேஸ்வரி, முத்துமாரி, புஷ்பம், செல்வராஜ், வேல்ராஜ், ராஜா ஆறுமுகம், உமாசங்கர், அலமேலு, ராமுராமர், ஷேக்முகமது, முப்பிடாதி, மற்றும் வீரா, ஜெயக்குமார், பாலாஜி, ஜான்சன், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



