விழுப்புரம், செப்டம்பர் 25 –
விழுப்புரத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி 2025 சிறப்பு விற்பனையை
மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறும் போது: இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி 2025 பண்டிகையை முன்னிட்டு கடலூர் மண்டலத்திற்கு ரூ.8.75 கோடி விற்பனை குறியீடாகவும், அதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் விற்பனை நிலையத்திற்கு ரூ.60.00 இலட்சமும் மற்றும் திண்டிவனம் விற்பனை நிலையத்திற்கு 5.23 இலட்சமும் விற்பனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் மாதாந்திர சிறுசேமிப்பு திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.3000 வரை 11 மாத தவணைகள் மட்டும் செலுத்தி 12-வது மாத தவணையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்வதுடன் கூடுதல் சேமிப்புக்கு பருத்தி மற்றும் பட்டு இரக துணிகளை வாங்கி பயன்பெறலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும், தீபாவளி சிறப்புத் தள்ளுபடி 30% வசதியுடன் அனைத்து அரசு பணியாளர்களுக்கும் கடன் விற்பனை வசதி உண்டு. எனவே, அனைத்து துறை பணியாளர்களும் கைத்தறிக்கு கைகொடுத்து உதவிடமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் திரு.S. மாணிக்கம், துணை மண்டல மேலாளர் திரு.M. பிரேம்குமார் மற்றும் விற்பனை நிலைய பணியாளர்களும் கலந்து கொண்டார்கள். விழா ஏற்பாடுகளை கோ-ஆப்டெக்ஸ் விழுப்புரம் விற்பனை நிலைய மேலாளர் திருமதி.A. பார்வதி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.



