கோவை, நவ. 08 –
கோவை மாவட்டம் வடவள்ளியில் செயல்பட்டு வரும் வித்யாலயா பள்ளியில் போதைப்
பொருள் ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது கல்வீரம்பாளையம் சந்திப்பில் தொடங்கி பள்ளி வரை நடைபெற்றது. பேரணியை சிறப்பு விருந்தினர் மருத்துவர் ரேவதி ஹரிஹரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மாணவர்களின் வழிப்பாட்டு பாடல்,கலை நிகழ்ச்சிகளுடன் பள்ளியின் தாளாளர் நிர்மல் குமார் ஜெயின் மற்றும் பள்ளி முதல்வர் உமாதேவி, துரைசாமி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர்களின் துணையோடும், காவல் துறை அதிகாரிகளின் பெரும் உதவியாளும் இப்பேரணி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இப்பேரணியில் மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு போதை ஒழிப்போம் என்று கோஷங்களை எழுப்பியும், போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாணவ மாணவியர் ஆசிரியர் பெருமக்கள் காவல் ஆய்வாளர் காவலர்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டனர்.



