சங்கரன் கோவிலில் நகராட்சி பள்ளிகள் மற்றும் பல்வேறு பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவுகள் மற்றும் குடிநீர் வழங்கப்படுகிறதா என நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் ஆலோசனைப்படி நகராட்சி ஆய்வாளர்கள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டன ர் மாணவ மாணவர்களுக்கு குடிநீர் முதல் உணவு வரை சுகாதாரமான முறையில் வழங்கும்படி பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து மாரிச்சாமி ஆகியோர் கொண்ட குழுவினர் செய்திருந்தனர்.



