திருப்பத்தூர்:ஜூன்:04, வாணியம்பாடி கோட்டம் நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பச்சூர் பகுதியில் அதிகமாக விபத்து நடக்கிறது என கண்டறியப்பட்டு விபத்துகளை குறைக்கும் பொருட்டு அவ்விடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்(NHAI) மூலம் அமைக்கப்பட்ட ஒலி,ஒளி எழுப்பும் அறிவிப்பு டவரை (ALL IN ONE SAFETY POLE) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். திறப்பின் போது நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள் உடன் இருந்தனர்.



