வேலூர் மாவட்டம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்
மற்றும் வேலூர் சி.எம்.சி. கண் மருத்துவமனை மற்றும்
பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின்
134 ஆம் ஆண்டு பிறந்தநாள் நினைவு
விழா மற்றும்
கற்பி இலவச இரவு பள்ளி இணைந்துநடத்திய இலவச கண் சிகிச்சை
மற்றும் அறுவை சிகிச்சை முகாம்
சேனூர் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் நடைபெற்றது .சேனூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மணி, துணைத் தலைவர் மஞ்சுளா சந்தானம், ஒன்றிய கவுன்சிலர் பிரபு, 11வது வார்டு உறுப்பினர் பிரசன்னா வேல்முருகன், 10வது வார்டு உறுப்பினர் ரீட்டா ரகு 12வது வார்டு உறுப்பினர் அமுதா ஜெயகாந்தன் ஆகியோர் கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். சி.எம்.சி.கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் ஹிட்லர் ஜான், ஜெயசுதா, பாரத்ராஜ் ,கோகுல்ராஜ், கரன், ஆகியோர் முகாமினை ஏற்பாடு செய்திருந்தனர் இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர் .கண்புரை கண்களில் நீர் வடிதல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை,
ஆகியவற்றுக்கான கண் பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர்



