கோவை, ஆக. 20 –
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் முனைவர் திப்பம்பட்டி வே. ஆறுமுகசாமி அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க. கிரியப்பவனர், மாநகராட்சி மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் சங்கேத் பல்வந்த் வாகே, தூய்மை பணியாளர் நல வாரிய துணைத் தலைவர் செ. கனிமொழி, தாட்கோ மாவட்ட பொது மேலாளர் மகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் சங்கீதா, (பேரூராட்சிகள்) உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், (ஊராட்சிகள்) உதவி இயக்குனர் கமலக்கண்ணன், நகராட்சி ஆணையாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



