கோவை, மார்ச் 25 –
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பேரூர் காவல் நிலைய காவல்துறையினர் குற்ற சம்பவம் நடக்காமல் கண்காணிக்க வேண்டி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ராமசெட்டிபாளையம் அருகில் சென்று சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் சரவணன் (24), பேரூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் விக்னேஷ் (22) மற்றும் மணிகண்டன் மகன் ஹரி ராகவேந்திரன் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ,ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.



