நாகர்கோவில், அக்டோபர் 6 –
மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட வேத நகர் சந்திப்பில் ரூ. 14.50 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள படிப்பகத்தை மேயர் மகேஷ் இன்று திறந்து வைத்தார். மேலும் 40-வது வார்டுக்கு உட்பட்ட வயல்தெரு சானல் கரை, 33வது வார்டுக்கு உட்பட்ட மேல சூரங்குடி – தொல்லவிளை சானல் கரை, 45வது வார்டுக்கு உட்பட்ட பூச்சி விளாகம் சம்பளம் கரை ஆகிய பகுதிகளில் ரூ. 4.68 லட்சம் மதிப்பீட்டில் இரும்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் நிசாந்த் கிருஷ்ணா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர்கள், உதவி செயற்பொறியாளர் ரகுராமன் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



