மார்த்தாண்டம், பிப். 10 –
களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன், இவர் மகன் அஜித் (31). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் (62) என்பவருக்கும் சொத்து சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று இது தொடர்பான வழக்குக்காக குழித்துறை நீதிமன்றத்திற்கு ஜான்சன் உள்ளிட்டோர் சென்றுள்ளார். வாகனம் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு விஜயகுமார் மற்றும் அவருடன் வக்கீல் டேவிட் மற்றும் கண்டால் தெரியும் 2 பேர் சேர்ந்து ஜான்சனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ஜான்சன் குழித்துறை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.
பின்னர் இது குறித்து ஜான்சன் களியக்காவிளை போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வக்கீல் விஜயகுமார், வக்கீல் டேவிட் மற்றும் கண்டால் தெரியும் 2 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதே போல் வக்கீல் விஜயகுமார் அளித்துள்ள புகாரில் நீதிமன்ற சாலையில் உள்ள அலுவலகத்தில் புகுந்து அவரை அஜின் (31), ஜோயல் (50), ஜான்சன் (57) ஆகியோர் தாக்கியதாக புகார் செய்துள்ளார். போலீசார் இரு தரப்பிலும் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


