மார்த்தாண்டம், பிப். 9 –
குலசேகரம் அருகே உண்ணியூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் ராஜய்யன் (65). இவரது மகன் ரதீஷ் (34) என்பவருக்கும் மோனிஷா (28) என்பவருக்கும் கடந்த 2024 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அப்போது அதிக வரதட்சனை கொடுத்து இந்த திருமண நடந்துள்ளது. இந்த நிலையில் திருமணம் ஆன சிறிது நாளில் மோனிஷாவின் கணவர், மாமனார் ராஜய்யன், மாமியார் விஜயா ஆகிய 3 பேரும் சேர்ந்து அதிக வரதட்சணை கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளனர்.
இதற்கு இடையில் ரதிஷ் வேலைக்கு சென்ற பிறகு மோனிஷா இருக்கும் அறைக்குள் சென்ற மாமனார் ராஜய்யன் தனது ஆசைக்கு இணங்குமாறு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இதை கணவரிடம் கூறியும் கணவரும் கண்டு கொள்ளவில்லை என்று என்று கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த மோனிஷா தனது பெற்றோரிடம் சம்பவத்தை கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை தட்டிக் கேட்க மோனிஷாவின் பெற்றோர் அங்கு சென்றபோது அவர்களையும் திட்டி, ரதீஸுக்கு வேறு திருமணம் செய்ய திட்டமிட்டனர். பாதிக்கப்பட்ட மோனிஷா இது குறித்து பத்மநாபபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். புகாரை விசாரித்த நீதிமன்றம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலிசாருக்கு உத்தரவிட்டது.
மகளிர் போலீஸ் சார்பாக வரதட்சணை கேட்ட கணவர் , பாலியல் துன்புறுத்தல் செய்த மாமனார், அதற்கு உடந்தையாக இருந்த மாமியார் என 3 பேரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


