குலசேகரம், மார்ச் 04 –
களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் குழித்துறை முழு வளர்ச்சிச் சமூகச் சேவைகள் கிட்ஸ் அமைப்பு (கைகள் மாதர் தன்னம்பிக்கை இயக்கம்) இனைந்து நடத்திய பெண்களின் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கு பலோட்டியகம் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் பணி புரியும் ஜெனிலெட் லீலா பெண்களின் மன ஆரோக்கியத்திற்கு நேர்மறை சிந்தனை இருந்தால் உடல் மனம் மற்றும் சமூகம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என கருத்துரை வழங்கினார். மேலும் இடையிடையே யோகா மற்றும் செயல்முறை பயிற்சியும் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கிட்ஸ் கைகள் மாதர் தன்னம்பிக்கை இயக்கத்தின் திட்ட இயக்குநர் கார்மேல்மேரி மற்றும் புத்தன்கடை வட்டார தலைவி மேரியம்மா தலைமை தாங்கினர். கைகள் மாதர் இயக்கத்தின் பணியாளர் ஆன்லெட், வட்டார சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூக பணித்துறை துனை பேராசிரியர் லேர்னி ஜான் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக செவிலியர் செல்வன் ஜோயல் கலந்து கொண்டார். குலசேகரம் பங்கு பணியாளர் அருட்பணி பிரிமுஸ்சிங் பரிந்துரையில் குலசேகரம் பங்கிலிருந்து பெண்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர். இந்த நிகழ்வை சமூக பணித்துறை மாணவி அந்தோனியம்மாள் ஏற்பாடு செய்திருந்தார்.



