கோவை, ஆகஸ்ட் 22 –
கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கார்மல் கார்டன் பதின்மப் பள்ளியில் வருடாந்திர விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், கராத்தே போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவில் முதன்மை விருந்தினராக மறைமாவட்ட மேதகு ஆயர் L. தாமஸ் அக்குவினாஸ், முதன்மை குரு பேரருட் திரு. ஜான் ஜோசப் தானிஸ் அடிகளார், சிறப்பு விருந்தினராக 4-வது படை அணியின் துணை தளபதி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் K. சுந்தர் ராஜ், முன்னாள் மாணவர் D. நந்த குமார், உரிமையாளர் செல்வம் ஏஜென்ஸி T. ராஜ்குமார் செயலாளர், ஒய்வு பெற்ற ஆசிரியர் ஜோதன்ராஜ், அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பள்ளியின் முதல்வர்கள் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



