கன்னியாகுமரி, பிப். 9 –
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து வருஷாபிஷேக விழா இந்த ஆண்டு நட்சத்திர திதிபடி சப்தமி திதியான நேற்று நடந்தது.
இதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு சுப்ரப சேவையும், புண்ணிய வாசனம், அங்குரார்பன ரக்சாபந்தனம், விசேஷ ஹோமம், அஸ்டோத்து ஸத கலசாபிஷேகம், உற்சவமூர்த்திக்கு மகா சாந்தி ஹோமம், பூர்ணாகுதி, அச்சதாரோபனம் போன்றவை நடந்தது.
பின்னர் சதாகலசாபிஷேக பூஜை நடந்தது. அதன் பிறகு சுவாமிக்கு திருமஞ்சனம் சாத்துதலும், யாகசாலை பூஜையும் நடந்தது.பின்னர் ஹோமம், யாகம் அபிஷேகம், தீர்த்த பிரசாதம் வ ழங்குதல் போன்றவைகளும் நடந்தது. அலங்கார தீபாராதனை நடந்தது. இந்த பூஜைகளை வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர்கள் நடத்தினார்கள்.
பின்னர் பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம்
செய்திருந்தது.



