கன்னியாகுமரி, நவ. 12 –
கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி தங்கம்மாள் (67). இவர்கள் இருவரும் மகன் மோகன் (49) என்பவர் பராமரிப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தங்கம்மாளுக்கு கண்களில் பார்வை குறைபாடு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் சரியான பார்வை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ தினம் தங்கம்மாள் வீட்டில் இருந்த விஷப் பொடியை கலக்கி குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் உறவினர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சையாக சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று தங்கம்மாள் உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


