நாகர்கோவில், அக்டோபர் 7 –
கோட்டார் கம்பளம் வணிகர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (53). அந்தப் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பாஸ்கர் உடல்நலம் சரியில்லாததால் சிகிச்சைக்காக வடிவீஸ்வரத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு தண்ணீர் பாட்டிலில் கொசு மருந்து இருந்ததாக கூறப்படுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்திருந்த பாஸ்கர் தண்ணீர் என்று நினைத்து கொசு மருந்து குடித்துள்ளார். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பாஸ்கர் பரிதாபமாக இருந்தார்.
இது குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஸ்கர் இறந்த சம்பவம் அறிந்த அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



