கன்னியாகுமரி, பிப். 27 –
கன்னியாகுமரி, கொட்டாரம் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு ஒரு வீட்டில் முன்பு நேற்று காலை நெல்லை மாவட்டம் பிள்ளையார்குளத்தை சேர்ந்த செல்லப்பாண்டி (33) என்பவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் ஹிட்டாச்சி வாகன டிரைவர் என்பதும் கொட்டாரம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் வேலைக்கு வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, ஒருவர் இரவு நேரத்தில் பெரிய கம்புடன் கொலை நடந்த வீடு அமைந்துள்ள பகுதியில் நடந்து சென்றது பதிவாகி இருந்தது. அந்த நபர் குறித்த போலீசார் விசாரித்த போது அவர் அதே பகுதியில் தங்கி இருக்கும் கூலி தொழிலாளி என தங்கபாண்டியன் (55) என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் தங்க பாண்டியனை பிடித்து விசாரித்ததில் செல்லபாண்டியை கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் தங்கபாண்டியன் மது போதையில் வந்து கம்மல் பயங்கரமாக தாக்கியதில் செல்ல பாண்டி இருந்ததாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக தங்கபாண்டியனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேல் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


