சுசீந்திரம், பிப். 9 –
சுசீந்திரம் அருகே உள்ள புத்தளம் அஞ்சு குடியிருப்பு பகுதியை சார்ந்தவர் சுதா குமாரி (30). இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு செல்வ பிரவின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு செல்வ கிரீஸ் (2) என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. செல்வ பிரவீன் நல்ல குடிப்பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது கணவரை சுதா குமாரி மதுப்பழக்கத்தை கைவிட்டு விடுங்கள் என கூறியுள்ளார். இதனால் சற்று காலம் மது அருந்தும் பழக்கத்தை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் மது போதையில் வீட்டிற்கு தனது கணவர் வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த சுதா குமாரி பெயிண்டில் கலக்க பயன்படுத்தப்படும் டின்னரை உடலில் ஊற்றி தீ வைத்து உள்ளார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனிக்காமல் சுதா குமாரி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தாய் தேவகி சுசிந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


