நாகர்கோவில், மார்ச் 11 –
கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் புனித ரமலானை முன்னிட்டு ஏழை மக்களுக்கு நோன்பு கிட் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நாகர்கோவில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மீரான் மைதீன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் ஹிமாம் பாதுஷா முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நோன்பு கிட் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஷேக் முகமது நோன்பு கிட் வழங்கினார்.
இதில் மாவட்டச் செயலாளர் செய்னுல் ஆப்தீன், அக்பர் ஆசிரியர், பொருளாளர் ஹுமாயூன் கபீர், சிறுபான்மையினர் கூட்டமைப்பு துணை தலைவர் ஸ்டுவர்ட், சம்சுதீன், ஹாஜி முகமது இக்பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக பொதுச்செயலாளர் முஜிபு ரஹ்மான் நன்றி தெரிவித்தார்.



