ஏரியூர், மே.06
ஏரியூரில் கடந்த சில நாட்களாக முதியவர் ஒருவர் நடமாடி வந்தார். உணவுக்கு வழி இன்றி தவித்த முதியவருக்கு, ஏரியூர் பகுதி பொதுமக்கள் உணவு வழங்கி வந்தனர். இந்நிலையில் ஏரியூர் விநாயகர் கோவில் அருகில் இன்று இறந்து கிடந்தார்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த ஏரியூர் போலீசார், பிரேதத்தை கைப்பற்றி, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர் யார்? எந்த ஊர்? மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்பது குறித்து ஏரியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.