மதுரை, அக். 07 –
மதுரை அவனியாபுரம் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையை உடைத்து சேதப்படுத்திய குற்றவாளியை இன்னும் கைது செய்யவில்லை. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டு.
அவனியாபுரம் எம் ஜி ஆர் சிலை சேதமடைந்தது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தமிழக மக்களின் இதயங்களில் வாழும் புரட்சித்தலைவரின் திருவுருவச் சிலை 30 ஆண்டு காலமாக அவனியாபுரத்தில் இருக்கிறது.
1990 இல் நிறுவப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இதுவரை எந்தவித சேதாரமும் ஆனதில்லை. எங்கள் தலைவரின் சிலைக்கே பாதுகாப்பு இல்லை என்றால் எங்கள் எடப்பாடியாருக்கு என்ன பாதுகாப்பு. ஏதோ தலைவர் சிலை என நினைக்காமல் காவல்துறை முனைப்புடன் செயல்பட வேண்டும். காவல்துறைக்கு எங்கள் பலம் தெரியும். எங்களை சீண்டி பார்க்க வேண்டாம். எங்கள் தலைவரின் சிலையை உடைத்த பிறகு சும்மா இருப்போம் என்று நினைக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து பேசினார்.


