ஊத்தங்கரை, செப். 13 –
ஊத்தங்கரையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இரவு பணியில் பணிபுரிந்த நொச்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மருத்துவர் நோயாளிக்கு மருத்துவம் பார்த்துவிட்டு சுமார் 2 மணி அளவில் ஓய்வெடுக்க அவரது அறைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் கதவை உடைத்துப் பார்த்து போது இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



