ஈரோடு, அக். 6 –
சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரன் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் ஈரோடு மாவட்டத் தலைவருமான நந்தகோபால் தலைமையில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மண்டல தலைவரும், ஈரோடு மாவட்டச் செயலாளருமான சோழா ஆசைத்தம்பி முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட கெளரவ தலைவர் கமலமுருகன், மாவட்ட துணைத் தலைவர்கள் மோகன், கொடுமுடி சுப்பிரமணி, தண்டபானி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வஜ்ரவேல், ராமலிங்கம், சென்னிமலை சிவசுப்பிரமணியம் வைரம், முருகானந்தபதி, சீனிவாசன், பிரதாப், விக்ரம், தங்கமாதேஸ்வரன், பாவடி மீட்புக்குழு அமைப்பாளர் சிவமுருகேசன், மாவட்ட துணைச் செயலாளர் உதயகுமார், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் கிருபா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஶ்ரீதர் மற்றும் இளைஞரணியினர், மகளிரணியினர், மாவட்ட, கிளை நிர்வாகிகள் உள்பட கலந்து கொண்டனர்.
மேலும் சென்னிமலையில் உள்ள திருப்பூர் குமரன் சிலைக்கும் மணி மண்டபம் அமைக்கும் நிகழ்ச்சியிலும் சிவகிரியில் உள்ள குமரன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



