ஈரோடு, ஆக. 22 –
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27 ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி ஈரோடு நசியனூரில் மும்முரமாக நடந்து வருகிறது. ஈரோடு நசியனூரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் சிற்ப கலைக்கூடத்தை சேர்ந்த வெங்கடாசலம் கூறியதாவது: கடலை மாவு, ஸ்டார்ச் மாவு, குச்சி கிழங்கு மாவு போன்ற சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத
ரசாயனம் கலக்காத வண்ணங்களை விநாயகர் சிலைக்கு பயன்படுத்துகிறோம்.
எங்களது சிலைகள் நல்ல தரத்துடன் மிகுந்த கலைநயத்துடன் குறைந்த விலையில் கிடைக்கும். 10 பேர் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரூ. 100 முதல்
ரூ. 18 ஆயிரம் வரை விநாயகர் சிலைகள் விற்கப்படுகிறது. ஆர்டரின் பேரில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப பெரிய சைஸ் அளவில் விநாயகர் சிலைகளை செய்து தருகிறோம். தற்போது அரை அடி முதல் 10 அடி வரையிலான விதவிதமான விநாயகர் சிலைகள் தயாராக உள்ளன. சதுர்த்திக்கு சில தினங்கள் முன்னதாக சிலைகள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.



