சேலம், ஆக. 12 –
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்த பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருள் விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டத்தை பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டுறவு சார் பதிவாளர்/ கள அலுவலர் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர் நியாய விலை கடை கொள் வினியாக அலுவலர் துவக்கி வைத்த போது உடன் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி க. சுரேஷ் குமார், ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் க. உமாசங்கர், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் காட்டூர் ஜெ. சங்கர், பேரூர் நகர செயலாளர் ரவிக்குமார், கட்சியின் மூத்த முன்னோடி கனகராஜ், எஸ்.ஆர். பார்த்திபன், பரமேஸ்வரி வரதராஜ், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



