இரணியல், மார். 6 –
இரணியல் அருகே மேல்கரை அடுத்த பள்ளம்பாலம் பகுதியை சேர்ந்தவர் செல்லம் (61). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அந்த பகுதியில் சூறாவளி காற்று திடீரென வீசியது. அப்போது அங்கு தென்னை மரத்திலிருந்து விழுந்த ஓலை ஒன்று அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பி மீது விழுந்தது. இதனால் ஓலை தீப்பற்றி எரிந்து கூரை வீட்டில் விழுந்து வீடு தீப்பிடித்தது.
இதை அடுத்து செல்லம் மற்றும் உறவினர்கள் தீயணைக்க முடயன்றனர்.
மேலும் தக்கலை தீயணைப்பு நிலைத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து வீட்டில் பிடித்த தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ளான கட்டில், மேஜை, நாற்காலிகள் தீயில் கருகி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்துக்கு மின்வாரியம் முழு பொறுப்பு என புகார் எழுந்துள்ளது. மின் வாரிய ஊழியர்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் அப்பகுதியில் செய்யவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டினர்.



