மதுரை, செப். 13 –
தமிழகத்தில் உள்ள கோயில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற இபிஎப் ஓய்வூதியதாரர்களுக்கு கருணை ஓய்வூதியம் மற்றும் பொங்கல் கருணை தொகை வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இதற்காக அனைத்து திருக்கோயில் ஓய்வு பெற்ற இபிஎப் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாநில தலைவர் கருப்பையா, பொதுச்செயலாளர் அரவணைச்செல்வன், பொருளாளர் திருப்பரங்குன்றம் கல்யாண சுந்தரபாண்டி, துணை செயலாளர்கள் திருச்செந்தூர் மாரிமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியப்பன் சுப்பையா, திருநெல்வேலி செண்பகம் மற்றும் நிர்வாகிகள் திருத்தணி சுப்பிரமணியன், மதுரை அழகர் கோயில் பாண்டியன் ஆகியோர் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மற்றும் அறநிலையத் துறை செயலாளர் கூடுதல் செயலாளர், அறநிலையத் துறை ஆணையாளர், கூடுதல் ஆணையாளர் நிர்வாகம் மற்றும் உயர் அலுவலர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.



