மார்த்தாண்டம், செப். 16 –
வாக்காளர் பட்டியலில் முறைகேடாக பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்கல் ஆகியவற்றை இந்திய தேர்தல் ஆணையம் முறைகேடாக செய்து வருவதாக கூறியும், இதனால் வாக்குத் திருட்டு நடைபெறுவதாக கூறியும், அதனை தடுத்து நிறுத்த கோரி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம் குழுத்துறை சந்திப்பில் இன்று நடந்தது. போராட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை வகித்தார்.
காங்கிரஸ் தமிழக சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் எம் எல் ஏ தொடங்கி வைத்தார். போராட்டத்தில் மேற்புறம் வட்டார தலைவர் ரவிசங்கர், ஜவகர் பால் மஞ்சு அமைப்பு அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் குமார், குழித்துறை நகரத் தலைவர் வக்கீல் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



