சென்னை, ஜூன் 24 –
இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், தந்தையர் தினத்தை முன்னிட்டு “அப்பாவுக்காக ஒரு மாலைப் பொழுது” என்று பொருளில் “ஏக் ஷாம் பாப்பா கே நாம்” என்ற ஒரு உணர்வுபூர்வமான பரப்புரை திட்டத்தை தொடங்கியுள்ளது. தந்தையை குடும்பத்தின் பொறுப்புகளை அக்கறையுடன் பூர்த்தி செய்யும் நபராக மட்டும் பார்க்காமல், அவரை ஒரு தனிப்பட்ட நபராக புரிந்து .கொள்ள முயற்சி செய்யுமாறு குழந்தைகளையும், பிள்ளைகளையும் இந்த விளம்பரப்படம் கேட்டுக்கொள்கிறது.
தி வொம்ப் நிறுவனத்தின் கருத்தாக்கத்தில் உருவான இந்த விளம்பர திரைப்படத்தை, குட் மார்னிங் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஷுஜாத் சௌதாகர் இயக்கியுள்ள இந்த குறும்படத்தில் அவினாஷ் திவாரி நடித்துள்ளார்.
தலைமுறைகளாக, தந்தையர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதன் வழியாகவே தங்களது அன்பை வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். குடும்பத்திற்காக உழைப்பதிலும், அவர்களை பாதுகாப்பதிலும் அவர்கள் காட்டும் அக்கறையில், அவர்களின் சொந்த கனவுகள், விருப்பங்கள் மற்றும் உணர்வுகள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களால் கவனிக்கப்படாமலேயே போய்விடுகின்றன. தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இருக்கும் இந்த இடைவெளியை குறைப்பதும், மற்றும் பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பல தியாகங்களையும், முயற்சிகளையும் செய்கிற தந்தையின் மறுபக்கத்தை பிள்ளைகளும், குழந்தைகளும் உண்மையிலேயே அறியுமாறு செய்வதே இந்த பரப்புரை திட்டத்தின் நோக்கமாகும்.
வொம்ப் நிறுவனத்தின் முதுநிலை கிரியேட்டிவ் பார்ட்னர் குஞ்சன் கபா கூறுகையில், “தந்தையர் தினத்தில் பல நிறுவனங்கள் தந்தையர்களைப் புகழ்ந்து பாராட்டுகின்றன. ஆனால் அந்த செய்திகளுள் பலவும் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போய்விடுகின்றன. குடும்பத்திற்காக உழைத்து வருவாய் ஈட்டும் நபர்களுக்காக செயல்படும் ஒரு நிறுவனமாக, நாங்கள் ஒரு எளிய உண்மையை உணர்ந்தோம்.
நம் தந்தையை, அப்பாவாக மட்டுமே நாம் பார்க்கிறோம். பெரும்பாலும் அவர் தான் முதலில் வீட்டிலிருந்து பணிக்காக வெளியே செல்பவராகவும், கடைசியாக வீட்டிற்கு திரும்புபவராகவும் இருக்கிறார். தன் அன்புக்குரியவர்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்கும் அவர், ஒரு மனிதராக அவர் அன்பு செய்யும் அதே நபர்களாலேயே அறியப்படாத நபராகவே இருந்து விடுகிறார். வருத்தத்தை வெளிப்படுத்தும் ஒரு கதையின் மூலம் சொல்ல நாங்கள் முடிவு செய்தோம். ஒரு மனிதரின் வருத்தம், பலருக்கு ஒரு நினைவூட்டலாக இருக்கக்கூடும் என்பதே இதற்கு காரணம். காலம் கடந்துவிடுவதற்கு முன்பே தந்தையை புரிந்துகொள்ளுங்கள்” என்றார்.


