சிவகங்கை, ஆகஸ்ட் 21 –
சிவகங்கை மாவட்டத்திலிருந்து இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியினர், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின்னரும் கடந்த ஆறு ஆண்டுகளாக எவ்வித தேர்தலிலும் பங்கேற்காததன் காரணத்தை தெரிவிக்கும் பொருட்டு அரசியல் கட்சியினருக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினருக்கு காரணம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மனித நேய ஜனநாயக கட்சிக்கு சென்னையில் உள்ள முதன்மைத் தேர்தல் அலுவலகத்தில் வருகின்ற 26.8.2025ஆம் தேதிக்கு முன்னர் நேரில் ஆஜராகி காரணம் கேட்கும் அறிவிப்புக்கு விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.


