சிவகங்கை மாவட்டம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நடைபெறவுள்ள தேசிய மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவை முன்னிட்டு அதன் ஒரு பகுதியாக பள்ளி கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற உறுப்பினர்கள் அரசுத்துறை ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது நகரின் முக்கிய வழியாக சென்று அரண்மனை வாசல் பகுதியிலுள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் நிறைவு பெறும் வகையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி அவர்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துக்கழுவன் மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம் உட்பட பலர் உள்ளனர்.



