கிருஷ்ணகிரி, அக்டோபர் 4 –
கிருஷ்ணகிரி நகராட்சி, ஆவின் மேம்பாலம் அருகில் உள்ள டி.சி.ஆர். ஜங்சன் பேருந்து நிறுத்தம் அருகில், நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து மழை நீரை வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் , அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆவின் மேம்பாலம் அருகில் சென்னை பிரிவு சாலை பகுதியில் நிரந்தரமாக மழை நீர் தேங்காத வண்ணம் தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ள கழிவு நீர் கால்வாய் சீரமைப்பு பணிகள் குறித்தும், நகராட்சி மற்றும் அகசிப்பள்ளி ஊராட்சி பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மற்றும் கூடுதலாக கழிவு நீர் கால்வாய்கள் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைதுறை, நகராட்சி துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இவ்வாய்வின் போது வட்டாட்சியர் திரு.ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், கிருஷ்ணகிரி நகராட்சி நகர் நல அலுவலர் கணேஷ் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.



