சென்னை
பெரம்பூர் ஜவகர் நகர்,70 அடி சாலையில் மனிதம் பல்நோக்கு மருத்துவமனை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. யாழினி மருத்துவமனை குழுமத்தின் ஒரு அங்கமான மனிதம் பல்நோக்கு மருத்துவமனையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவர் திமுக-வின் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான. பி.கே.சேகர்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த
திறப்பு விழாவை முன்னிட்டு
இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொது மருத்துவம் இதய நோய் மருத்துவர்கள் எலும்பியல் மருத்துவர்கள் சிறுநீரகவியல் மருத்துவர்கள் சர்க்கரை நோய் மருத்துவர்கள் குழந்தை நல பாதுகாப்பு மருத்துவர்கள் பாத பராமரிப்பு நிபுணர்கள் கலந்து கொண்டு இலவச சிகிச்சை வழங்கினர்.
இந்த முகாமில் ஈசிஜி எக்கோ பாத பராமரிப்பு எலும்பு அடர்த்தி கிட்னி கல்லீரல் பாதுகாப்பு நீரழிவு தைராய்டு போன்ற வற்றிற்கான பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து பயன்பெற்றனர்.



