திருப்பத்தூர், ஆக. 19 –
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதிசக்தி நகர், ஆதியூர், சு.பள்ளிப்பட்டு பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடைகளை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி திறந்து வைத்தார்.
ஆதிசக்தி நகரில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்நோக்கு கட்டிடம் மற்றும் பகுதி நேர நியாய விலைக் கடையினை சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று அப்பகுதி மக்களின் சேவைக்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியானது கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டுறவு சார் பதிவாளர் தர்மேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமை தொகை, நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், தாயுமானவர் திட்டம், மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என பேசினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சார் பதிவாளர் கோகிலா, கூட்டுறவு செயலாளர் குமார், கந்திலி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி திருமுருகன், ஒன்றிய துணை சேர்மேன் மோகன்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் , துணைத் தலைவர் பழனிவேல், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன், கந்திலி கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் சக்திவேல், கிளை செயலாளர் மாதவன், பிரதிநிதி குமாரசாமி, கழக முன்னோடி ஸ்டாலின் பிரேமா, சமூக வலைதள பொறுப்பாளர் சோனியா சக்திவேல், சம்பத், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் செந்தில், இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர்கள் பிரபாகரன், யுவராஜ், கோபிநாத், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பிரேம் நாத், ஆதியூர் கிளை செயலாளர் அன்பு, ராவுத்தம்பட்டி கிளை செயலாளர் தசரதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நந்தகுமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
மேலும், ஆதியூர் ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில் மாநில நிதி குழு மானியம் (மாவட்ட ஊராட்சி) திட்டத்தின் கீழ் பல்நோக்கு கட்டிடமும், சு.பள்ளிப்பட்டு பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடையினை திறந்து வைக்கப்பட்டது. கந்திலி ஒன்றியத்தில்
ஒரே நாளில் மூன்று பகுதி நேர நியாய விலைக் கடையினை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கூட்டுறவு செயலாளர் குமார் நன்றி கூறினார்.



