வேலூர், ஆகஸ்ட் 15 –
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் டாக்டர் எம்ஜிஆர் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சுந்தரி அம்மன் பூ பல்லட் திருவிழா வெள்ளிக்கிழமை சுதந்திர தினத்தன்று காலை 9 மணிக்கு மேல் அம்மனுக்கு ஜலம் திருட்டுதலும் பகல் 12 மணிக்கு மேல் அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் வைத்தலும் சிறப்பாக நடைபெற்று இரவு 9 மணி அளவில் மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை பிற்பகல் 6 மணி அளவில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகள் விழா அமைப்பாளர்கள் மகேஸ்வரன் குமார், சுகுமாரன், ராஜாமணி, ராமு, சுரேஷ், பழனி, தாமோதரன், புருஷோத்தமன், சீனிவாசன், சிகாமணி, ஆனந்தன், பாஸ்கரன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.



