மார்த்தாண்டம், ஜூலை 24 –
அருமனை அருகே இரும்புலி பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ்-விலாசினி தம்பதியின் மகள் பென்ஷா (28). இவர் ராஜ் வினிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் பென்ஷா அவரது 2 குழந்தைகளுடன் திடீரென வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். இதையடுத்து தாய் விஷாலினி அருமனை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் பென்ஷாவை பலமுறை அவரது கணவர் ராஜ் வினிஷ் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிய வந்தது. மேலும் அவர் மாயமான 2 தினங்கள் முன்பு மனைவி பென்ஷாவை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விலாஷினி போலீசில் புகார் செய்துள்ளார்.