திருப்பத்தூர்:ஜூன்:30, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைப்பெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயணன், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் டாக்டர் உமாமகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குநர் கண்ணகி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் என பலர் கலந்துக்கொண்டனர்.



