திண்டுக்கல், ஆக. 16 –
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட நூற்றாண்டு பழமையான பள்ளியாகும். இப்பள்ளியில் கடந்த 1992ம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், சார்பு ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் தலைமை வகித்து 33 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் படித்த பள்ளியில் ஒன்று கூடினர்.
அப்போது ஒழுக்கத்தையும், கல்வியையும் வழங்கி தங்கள் வாழ்வு சிறக்க உதவிய முன்னாள் இந்நாள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அனுவித்து நெகிழ்ச்சியுடன் காலில் விழுந்து ஆசி பெற்றனர். மேலும் தங்கள் படித்த பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசியர், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் விஜயக்குமார், ஜெயவீரன், இரஞ்சித்குமார், குமரேசன், முத்துக்காமாட்சி, கருப்பையா, அமுல்ராஜ், தனபாண்டி, நாகபால், செந்தில்குமார், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



