By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 130 நபர்களிடம் ரூ 1.50 கோடி ஏமாற்றிய நபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 130 நபர்களிடம் ரூ 1.50 கோடி ஏமாற்றிய நபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 130 நபர்களிடம் ரூ 1.50 கோடி ஏமாற்றிய நபர் கைது

Last updated: February 18, 2026 5:48 pm
February 18, 2026
23 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப்.19-

குமரி மாவட்டம் மாதவபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராம்குமார் என்பவரது மகன் சந்தோஷ் (31). இவர் அந்த பகுதியில் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் நிறுவனத்தை தொடங்கினார்.

பின்னர் வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக சுமார் 130 நபர்களிடம் ரூ 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கு அனுப்பாமலும், சிலரை விசிட்டிங் விசாவில் வெளிநாட்டிற்கு அனுப்பி வேலைவாங்கி தராமல் திருப்பி அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

உத்தரவின்படி காவல்துணை கண்காணிப்பாளர் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் 130 பேரிடம் பணம் பெற்றுக்கொண்டு சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் ஏமாற்றியது தெரியவந்தது.

இந்நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மேற்படி குற்றவாளி சந்தோஷ் என்பவரை மதுரையில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புகார் அளித்த 24 மணி நேரத்திற்க்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாவட்ட போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மேற்கண்ட நபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ யாரேனும் பணம் கொடுத்து ஏமாந்திருந்தால் மாவட்ட குற்றப்பிரிவில் நேரடியாகவோ அல்லது 9498196976 என்ற எண்ணிற்க்கோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் உண்மை தன்மை மற்றும் ஏஜென்ட்டுகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் 7010363173 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இது போன்ற மோசடிகளில் சிக்கி கொண்டால் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாட்சப் எண்ணிலோ (8122223319) அல்லது நேரடியாகவோ புகார் அளிக்கலாம்.

வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று ஏமாற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடர்ச்சியாக இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டு உடைப்பு
பி.டி செல்வகுமார் கோரிக்கை மனு
குமரி கலெக்டர் அலுவலகத்தில்உயர் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை
கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கில் மூவர் கைது.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கூலித் தொழிலாளி விஷம்அருந்தி சாவு

September 9, 2025
30 Views
மதுரை புதுமண்டபம் புனரமைப்புக்கு ஐகோர்ட் உத்தரவு
தொழிற்கல்வி படிப்புக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை
அகஸ்தீஸ்வரத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் விஜய்வசந்த் எம்.பி திறந்து வைத்தார்
சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account