ஈரோடு, ஆகஸ்ட் 03 –
லட்சிய ஜனநாயகக் கட்சியின் ஈரோடு மேற்கு மற்றும் பவானி மாவட்டச் செயலாளராக Dr.வெற்றிநிதி சின்னையன் (MBBS., MD(OG)., FRM.,) புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமக்கு இந்த பொறுப்பை வழங்கிய கட்சியின் மாநிலத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் MLA, மாநிலப் பொதுச்செயலாளர் திரு நெல்லை ஜீவா, மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் திரு லிங்கராஜ், மாநில முதன்மை அமைப்பாளர் திரு கார்த்திகேயன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் பிரகாஷ் சின்னையன் ஆகியோருக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
“சொல் அல்ல! செயல்!!” என்ற கட்சியின் முழக்கத்திற்கு ஏற்ப, கட்சிப் பணிகளை விரைவுபடுத்தி புதிய உறுப்பினர்களை பெருமளவில் சேர்க்கும் பணிகளில் ஈடுபடப்போவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நியமனத்தைத் தொடர்ந்து, ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் உள்ள காமராஜர் சிலைக்கும், பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கும் Dr.வெற்றிநிதி சின்னையன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உடன் கிழக்கு மாவட்ட செயலாளர் அருள் மற்றும் ஈரோடு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மங்கையர்க்கரசி பிரகாஷ் உட்பட பலர் இருந்தனர்.



