விழுப்புரம், செப்டம்பர் 15 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் “அன்புக் கரங்கள்” திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து விழுப்புரம் தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் க. பொன்முடி விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச. சிவக்குமார் ஆகியோர் “அன்புக் கரங்கள்” திட்டத்தினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம. ஜெயசந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் திருமதி ஷீலா தேவி சேரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி பார்கவி உட்பட பலர் உள்ளனர்.



