திருப்பூர், ஆக. 01 –
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் IDPL சார்பில் கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரையில் 340 கிலோமீட்டர் தொலைவிற்கு எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது இதில் திருப்பூர் மாவட்டம் முத்தூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனஹந்தி வரை நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கப்படுகிறது ஆனால் இருதூரிலிருந்து முத்தூர் வரையிலான 70 கிலோமீட்டர் தூரம் மட்டும் விவசாய விளைநிலங்கள் வழியாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி காவல் துறை பாதுகாப்புடன் பணிகள் நடப்பதால் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலம்பட்டி டோல்கேட் பகுதியில் விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளைநிலங்களில் குழாய் பதிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் நெடுஞ்சாலை வழியாக குழாய்களை பதிக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்படும் விவசாயிகள் திருப்பூர் தாராபுரம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக அரசின் உடைய நடவடிக்கையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். திடீரென நான்கு பெண் விவசாயிகள் உடலில் மன்னனை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டவர்கள் மீது தண்ணீரை ஊற்ற முயன்ற போது உங்களது உதவி எங்களுக்கு வேண்டாம் என்றும் ஆவேசம் அடைந்தனர்.
இதனால் விவசாயிகளுக்கும் போலீசா இருக்கும் இடையே தள்ளுமுள்ளு கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் இத்தகைய அடக்கு முறையை கண்டிப்பதாகவும் கோஷங்களை எழுப்பி விவசாயிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில்: தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு விவசாயிகளை அழைத்து விளைநிலங்கள் வழியாக என்னை குழாய்களை அமைக்காமல் மாற்றுப் பாதை குறித்து பேச வேண்டும். இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும். போலீசாரின் உதவியோடு அளவீடு பணிகளை செய்ய முற்பட்டால் தடுத்து நிறுத்துவோம். இந்தத் திட்டத்தை நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டும் என தங்களது போராட்டம் தொடரும் என்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் அருகே வேலம்பட்டி டோல்கேட் பகுதியில் விவசாயிகள் idpl என்னை குழாய் பதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென நான்கு பேர் அடுத்தடுத்து உடலில் மன்னனை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.



