தென்காசி, ஆகஸ்ட் 21 –
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் நெற்கட்டான் செவல் பச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள மாவீரர் ஒண்டிவீரன் 254-வது நினைவு தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது நினைவுத்தூணிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பொன்முத்தையா பாண்டியன், நெற்கட்டும் செவல் பஞ்சாயத்து தலைவர் பாண்டிய ராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் விமலா மகேந்திரன், சிவகிரி வட்டாட்சியர் அப்துல்சமது, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



