சங்கரன்கோவில், அக். 06 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேல நீலிதநல்லூர் ஒன்றியம் பட்டாடை கட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சர்க்கரைகுளத்தில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியும் 10 லட்ச ரூபாய் மதிப்பிலும், தர்மத்தூரணியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் பணியும், பட்டடைக்காட்டியில் 10 லட்சம் 50 ஆயிரம் முதலீட்டில் நியாய விலைக் கடை ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பற்றாடக்கட்டி பட்டாடை கட்டி பஞ்சாயத்து தலைவர் சுமதி கனகவேல் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம் எல் ஏ கலந்து கொண்டு பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து வென்றிலிங்கபுரம் முதல் பட்டாடைகட்டி வரை ஒரு கோடி ரூ.3 லட்சம் மதிப்பில் கலைஞரின் கிராம சாலை பணி முடிக்கப்பட்டதை மக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். ரூபாய் 19 லட்சத்து 60 ஆயிரம் முதலீட்டில் வென்றிலிங்கபுரம் பட்டாடை கட்டி தட்டாங்குளம் குளத்தினை பராமரித்து கரை உயர்த்தும் பணி முடிக்கப்பட்ட நிலையில் அதனை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர்கள் செல்லத்துரை, வினுசக்கரவர்த்தி, பொருளாளர் பண்டாரக்கண்ணு, எம்எஸ்எல் பிரேம்குமார், கிளைச் செயலாளர் கனகராஜ், கன்னிமகாராசா, சந்திரன், வேல்முருகன், சார்லஸ், இளைஞரணி சரவணன், ராக்கையா, பிச்சகுட்டி, சிவகுருநாதன், கருப்பசாமி, வீரையா, லூர்து, சுப்புராஜ், சார்லஸ், டிடிசி ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் அருள்சீலி, மற்றும் முத்துமாரி, வினுசக்கரவர்த்தி, துணைத்தலைவர் வடகாசி, சக்திவேல், சீனிவாசன் ஜெயகணேஷ் ரவிக்குமார் பழனிசாமி ஆசிரியர் கிருஷ்ணசாமி, தொழிலதிபர் கனகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



